செவ்வாய், 15 செப்டம்பர், 2015

உன்னுடன் பிறக்கவில்லை,
உதிரச் சொந்தம் நமக்குள் இல்லை.
உயிரான உடன்பிறப்பாய் நம்மை 
உருவாக்கியது நம் உன்னத அன்பு...

மகுடிக்கு மயங்கிடும் அரவம் போல-
"தம்பி" எனும் உறவினில் 
மயங்கிடும் அக்கா நான்...

என்னுள் புதைந்து இருக்கும்
பாசத்தின் பாரத்தினை - இந்த
எழுத்துகளால் சுமக்க இயலாது...

சொற்களில் அடைத்திட முடியாத நம்
சொந்தம் தொடரட்டும் என்றென்றும் ..

வருடம் ஒவ்வொன்றும் உனக்கு
வளமாய் அமையட்டும்...

நிறைவான செல்வங்களும்,
நிம்மதியான இன்பங்களும்,
அன்பான உறவுகளும்,
ஆண்டவனின் அருளும்
ஆழியாய்ச் சூழ்ந்திருக்கட்டும்
எப்போதும் உன்னை...!

அன்புத் தம்பிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..!!!


                                              அன்புத்தம்பி நரேனுக்காக -  ஜனவரி 29, 2015-ல் எழுதியது..

கருத்துகள் இல்லை: