காணும்
பொழுதெல்லாம்
உனைக்
கண்களில் நிறைத்தேன்...
காணாப்
பொழுதுகளை எல்லாம்
கல்லாய்ப்
போகச் சபித்தேன்...
கண்ணும்
கண்ணும்
கலந்து - நம்
எண்ணம்
ஒன்றாய்ச்
சமைந்து
- ஒளி
வண்ணச்
சிதறல் ஓவியமாய்க்
காதல்
கிண்ணத்தில் குழைவோம்
வா
!!!
முழுநிலவில்
முகிழ்த்த காதல்
முன்பனிச்
சாரலில் நனைய -
மூடுபனிக்
காவியம் ஒன்றைத்
தேடும் பணி செய்வோம் வா!!!
2 கருத்துகள்:
அருமை
மேலே ஒரு பல்லவியும், இதே போல் இன்னெரு சரணமும் எழுதிடுங்கள்.இதை இரண்டாவது சரணமாக வைத்துக் கொள்ளலாம். வாழ்த்துகள்
மிக்க நன்றி அண்ணா.. முயற்சிக்கிறேன்..!
கருத்துரையிடுக