புதன், 7 அக்டோபர், 2015

ஓ(கா)வியக் காதல்!

     
காணும்  பொழுதெல்லாம்  உனைக்
கண்களில்  நிறைத்தேன்...
காணாப் பொழுதுகளை  எல்லாம்
கல்லாய்ப் போகச்  சபித்தேன்...

கண்ணும்  கண்ணும் கலந்து - நம்
எண்ணம்  ஒன்றாய்ச்  சமைந்து - ஒளி
வண்ணச் சிதறல்  ஓவியமாய்க்  காதல்
கிண்ணத்தில்  குழைவோம்  வா !!!

முழுநிலவில் முகிழ்த்த காதல்
முன்பனிச் சாரலில் நனைய -
மூடுபனிக் காவியம் ஒன்றைத்
தேடும் பணி  செய்வோம்  வா!!!





2 கருத்துகள்:

Unknown சொன்னது…

அருமை
மேலே ஒரு பல்லவியும், இதே போல் இன்னெரு சரணமும் எழுதிடுங்கள்.இதை இரண்டாவது சரணமாக வைத்துக் கொள்ளலாம். வாழ்த்துகள்

பொதிகை பிரபா சொன்னது…

மிக்க நன்றி அண்ணா.. முயற்சிக்கிறேன்..!