சனி, 7 நவம்பர், 2015

தித்திக்கும் தீபாவளி!!!

நண்பர்களாகிய சொந்தங்களுக்கும், சொந்தங்களாகிய நண்பர்களுக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பாக இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள்..!

தித்திக்கும் இத்தீபாவளி,
எத்திக்கும் பரப்பட்டும்
மத்தாப்பாய் மகிழ்ச்சியை...

புத்தாடை அணிந்து,
பத்திரமாய்ப் பட்டாசு
வெடித்திட உதவட்டும்..!

முத்திரைப் பதிக்கும்
முத்தாய்ப்பான நிகழ்வுகள்
சித்திரமாய் மனதில்
சிறப்புடனே தங்கட்டும்..!

பலகார இனிப்புகளும்,
குலாவிடும் உறவுகளும்,
சிலாகிக்கும் சொந்த ஊரும்,
விலைமதிப்பில்லா நட்புகளும்

என்றும் நம்மை
அலைபோல் அணைக்கட்டும்!
நெஞ்சில்
சிலைபோல் நிலைக்கட்டும்!
வாழ்வில்
கலைபோல் சுவைக்கட்டும்!
வானுயர்ந்த
மலைபோல் பாதுகாக்கட்டும்!

முத்தான  பழைமை முறைகளும்,
முன்னோர் வாழ்ந்துகாட்டிய நெறிகளும்,
தமிழ்க் கலாச்சாரப் புதையல்களும்,
ஏரோட்டும் உழவனும்
நீர்தரும் நதிகளும்
சீர்படுத்தட்டும் நம்மை!

பட்டாசுக் குப்பை போல
ஒதுக்கிடுவோம் மேற்கத்திய மோகத்தை..!

தீபத்தின் ஒளியாய்ப் பாதுகாத்துப்
பரப்பிடுவோம் நம்
தாய்த்தமிழ்ப் பண்பாட்டினை..!

தமிழ்ச் சொந்தங்கள் அனைவருக்கும் மனம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள்..!