செவ்வாய், 15 செப்டம்பர், 2015

இயக்குனர் சிகரத்திற்கு எனது சிறு காணிக்கை.....
இயக்குனர் சிகரம் ! - தான்
இயக்கியவர்களை எல்லாம்
சிகரத்தில் ஏற்றிய மாமேதை..
புதுமைப்பெண்களைப் படைத்ததில்
திரையுலக பாரதி...
நன்னிலத்தில் விளைந்த
திரைக் கற்பக விருட்சம்...
அசர வைக்கும் கதாபாத்திரங்களை
அநாயாசமாகக் கையாண்ட
அசகாய சூரர்...
எல்லோரின் மரணமும் - அது
எதிரியேயாயினும்
நம் மனதைச் சற்றே அசைக்கும் ;
ஒரு சிலரின் மரணம் மட்டுமே
உயிரின் வேர்வரைச் சென்று உலுக்கும்.!
நடிகர் திலகம் திரு.சிவாஜி,
நகைச்சுவை மன்னர் திரு.நாகேஷ்,
திரு.நம்பியார், திருமதி.சுஜாதா,
திரு.மணிவண்ணன், திரு.முரளி,
வாலிபக் கவிஞர் வாலி -
இவர்களின் வரிசையில்
இழக்க முடியாத, இன்னும்
நம்ப முடியாத, இம்மியளவும்
ஏற்க முடியாத மரணச் செய்தி-
இயக்குனர் சிகரத்தின் மரணச் செய்தி...
வயோதிகத்தின் முடிவுரை மரணம் என்றும்,
மாண்டவர் ஒருபோதும் மீண்டதில்லை என்றும்
பகுத்தறியும் பக்குவம் இருந்தாலும்
பாழும் மனது கேட்பதில்லை;
பரிதவிக்கத்தான் செய்கிறது ...
இறைவனின் இணையடி நிழலில்
இளைப்பாறச் சென்றிருக்கும்
அன்னாரது ஆத்மா -
அமைதியில் நிலைத்திட
ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன் !!!

                                                        டிசம்பர் 24,2014-ல் எழுதியது...

கருத்துகள் இல்லை: