வெள்ளி, 30 அக்டோபர், 2015

அன்புச்  சகோதரனே !
எங்கள் சின்னக் கலைவாணரே !

பூமித்தாய்க்கு இயற்கை ஆடை உடுத்த
ஊரெங்கும் மரக்கன்றுகள் நட்டாய் - இன்றோ
உன் குலக்கன்று பட்டுபோனதே - இப்பாரம்
எவ்விதம் சுமப்பாய்?

பதின்ம வயதுப் பாலகனின் இழப்பை
எதைக்கொண்டு ஈடுசெய்யப் போகிறான் இறைவன்?

எம் ஆறுதல் வார்த்தைகள் அழித்திடுமா
உன் கண்ணீர்க் கறைகளை?!

இழப்பின் வேதனையை நீ
இறக்கி வைக்க ஓர் இடமளிக்க
இயலாமல் இரங்குகிறோம்...

விண்ணுலகம் சென்ற உன்
செல்ல மகனைத் தன்
கண்ணைப்போல் பார்த்துக்கொள்வார்
உன் குருநாதர் ஐயா அப்துல் கலாம் !!!

கலங்கிய நெஞ்சுக்குக் கடிவாளமிட்டுச்
சற்றே ஆசுவாசப்படுத்திக் கொள்..!

உன் மூன்றாவது கண்ணை
முறையின்றிப் பறித்திட்ட
மரணத்தைச் சபிக்கின்றோம் ...

சகோதரர் விவேக் அவர்களின் மகனுடைய ஆத்மா இறைவன் இணையடி நிழலில் இளைப்பாறப் பிரார்த்திக்கிறேன்...!

கருத்துகள் இல்லை: