செவ்வாய், 15 செப்டம்பர், 2015

அன்பின் சீதனம் அவள் - என்றும் 
ஆறுதலுக்கு இனியவள்...
இறைபக்தியில் இமயம் அவள்;
ஈகையின் மறு பிம்பம் அவள்...
உபசரிப்பில் உச்சமாய் நின்று - என்றும்
ஊர்போற்றும் தெய்வம் அவள்...

முற்பிறவியில் யாம்செய்த தவத்தால்
இப்பிறவியில் எமக்கு
அன்னையாய் இறைவன் கொடுத்த
ஆகாய கங்கை அவள்...

பொறுமையின் எல்லை அவள்..
பொறாமையின் எதிரி அவள்..
எல்லோருக்கும் எப்போதும்
இன்முகம் காட்டி நிறைவாய்
இன்னமுது அளிக்கும் - எம்
எல்லைக்காவல் தெய்வம் அவள்...

சீனியும் சர்க்கரையும் இனிக்கவில்லை -
சீனியம்மாவின் அன்பின் முன்னால்..!

அன்பு அம்மாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...!


                            என்னை ஈன்ற தாயைப்போலவே பாசம் காட்டும் இன்னொரு தாய்; போன ஜென்மத்தில் நீ என் வயிற்றில் தான் பிறந்திருப்பாய் என்று அடிக்கடிச் சொல்லி ஆனந்தம் கொள்ளும் அம்மா - சீனியம்மாள் அம்மாவுக்காக எழுதியது... (ஏப்ரல் 3,2015).

1 கருத்து:

Unknown சொன்னது…

பரிவுடன் தழுவிய
பாசத் திருக்கரம்

பட்டதும் கண்டதோ
உன் முகம்
ஈன்ற திருமுகம்

தினம் தினம்
தொழ வேண்டிய
தாயின் திருவடி

வாழ்த்துக் கவிதையில்
முதல் வரி
உன் வரி


எழுத்துக்கு வாழ்த்துகள்
எழுதத் தூண்டியதற்கு நன்றி