திங்கள், 27 ஜூன், 2011

முதல் பதிவு






மூலப்பொருளாய் உனையே
முன்னிறுத்தி முக்காலமும் - நின்
திருவடி தொழுதால்
எக்காலமும் துன்பம் எமைத்
தாக்கிடாது! திக்கெட்டும்
நிறைந்து நிற்கும் எம்
பரம்பொருளே கண்ணா-
கார்மேக வண்ணா போற்றி!

முத்தமிழில் முதலெடுத்து
சித்தமதில் உனை நிறைத்து
பாமாலைகள் செய்து - நின்
பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்...

வலைப்பதிவு வயலில் - நான்
நடவு செய்யும் - இம்
முதல் கவிநாற்றினை
முடியாய்ச் சூடிக்கொள்
முகுந்தனே - எம்
முதல்வனே - நும்
பதமலர் சரணம்...