செவ்வாய், 15 செப்டம்பர், 2015

ஒரு வாழ்த்துச் சொல்ல வேண்டும்...
ஆனால் வார்த்தைகள் தான் சிக்கமாட்டேன் என்கிறது...

என்ன எழுதுவது?
என்னென்னவோ எழுதலாம்..
எண்ணமனைத்தையும் எழுதலாம்...
எழுத்துக்களை ஒவ்வொன்றாய்க் கோர்த்து 
எழுதிவிடலாம் தான்...

எழுத்துக்களும் என்னிடம்
கண்ணாமூச்சி ஆடினால் - அடியேன்
என்னதான் செய்வது?

உனது நட்பால் உருவானது
நம் உறவு..
இன்றுவரை நம் பாசத்தில்
இருந்ததில்லை சரிவு..

சோகத்தில் நான்
தொய்வடைந்த தருணங்களில்
சோதரனாய் நீ தோள் கொடுத்தாய்..

ஆறுதலாய் நீ சொன்ன
அந்நேரத்து வார்த்தைகள் - என்
ஆயுள் நீடிக்க உதவிய
அமிர்த மாத்திரைகள் ...!

ஓர் வயிற்றில்
பிறந்தால் தான் தம்பியா?
மாற்றிக் காட்டினாய் - உன்
மாற்றுக்குறையாப் பாசத்தினால்..

சிவா மூலம் கிடைத்த
இந்த உறவு - என்
சீவன் உள்ளவரை நிலைக்கட்டும்...

சீரான வாழ்வும்,
சிறப்பான நிகழ்வுகளும்,
மகிழ்வான தருணங்களும்,
நெகிழ்வான நினைவுகளும்,

மனநிறைவும், மனமகிழ்வும் கொண்டு
வெற்றிப்பாதையில் வீறுநடை போட
வாழ்த்துகிறேன்....

அன்புத் தம்பிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...! 


                                               அன்புத்தம்பி சரவணனுக்காக - மார்ச் 12,2015-ல் எழுதியது..

கருத்துகள் இல்லை: