செல்லமாய் நீ
அழைக்கும் தருணம்
செல்லரித்துப்போன
செல்களும் கூட
புல்லரித்துப் போகின்றன...
உன் வார்த்தைகளில் எதனைக்
குழைத்து வைத்திருக்கிறாய் ?
உன் பார்வைகளில் எதனைத்
தேக்கியிருக்கிறாய்?
என் உயிரினையே உலுக்குகின்ற
அந்தக் காதலை எங்கு
வரமாய்ப் பெற்றாய்?
வள்ளல் போல அன்பை
அள்ளி அள்ளி தருகின்றாயே-
உன் சிறு இதயத்திற்குள்
இவ்வளவு அன்பா?
காதலுக்கு எல்லை இல்லை
என்பது எவ்வளவு பெரிய பொய்.
ஆம்! காதலுக்கு எல்லையாகத்தான்
நீயிருக்கின்றாயே...
உன்னையும் தாண்டி ஒரு காதல்
இருக்கிறதா என்ன?
கற்பக விருட்சமான
உன் இதயத்தில் மலர
கற்பூர முல்லையாக
எனைத் தேர்ந்தெடுக்க
என்ன தவம் செய்தேன் நான் ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக