திங்கள், 4 ஜூலை, 2011

என் கன்னுக்குட்டிக்கு


தூரிகைக்குள் சிக்காத வண்ணமே - என்
தூளியிலே ஆடுகின்ற அன்னமே ...
கதிரவன் தீண்டாத காலைப்பனியே - என்
காதலில் விளைந்த கவிதையே ...

கன்னித்தமிழ் கருவளர்ந்த கற்பகமே - எனை
அன்னைத்தமிழ் ஆக்கிவைத்த அற்புதமே ...
மலருக்குள் மையம் கொண்ட மகரந்தமே - என்
மன்னவன் தந்த மரகதமே ...

முன்னம் செய்த தவப்பயனே - எனை
அன்னை ஆக்கிய குலதெய்வமே ...
எம் ஆயர்பாடி கண்ட செல்லக்கண்ணனே - என்
மன்னவனை தினம் காட்டும் கண்ணாடியே ...

மகனாய் வந்தாய் - எமை
மகிழ்ச்சியில் நிறைத்தாய் !
மணி விளக்கே ! என்
மாடப்புறாவே !
முல்லைப்பூவே - நான்
முக்தியடைந்தேன் உனை
மகனாய் ஈன்றதால் !!!

கருத்துகள் இல்லை: